36) கோவா
கோவா (Goa) : பழைய இந்து புராணங்களின் படி இந்த பகுதி கோவே, கோவாபுரி மற்றும் கோமண்ட் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. அரேபிய பூகோள ஆய்வாளர்கள் இந்த நகரை சிந்தாபூர் அல்லது சண்டாபூர் என்று அழைத்தனர். 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதை கைப்பற்றிய போர்த்துகீசியர்கள் இதை வெல்கா கோவா என்று அழைத்தனர். போர்த்துகீசிய காலனி ஆதிக்கத்தில் இருந்தது இந்திய சுதந்திரம் பெற்றும் இந்தியாவுடன் இணைக்க போர்த்துகீசிய ஆட்சியாளர்கள் மறுத்தனர். பல போராட்டங்கள் இராணுவ நடவடிக்கையின் மூலம் இந்த பகுதி கி.பி.1961ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஆனாலும் போர்த்துகல் சர்வதேச நீதிமன்றத்தை நாடியும் இந்தியாவிற்கு சாதகமாகவே நீதி கிடைத்தது. பனாஜி (Panaji) : பனாஜி என்ற வார்த்தை பஞ்சனி மற்றும் காளி என்ற வார்த்தைகளில் இருந்து வந்தது. கி.பி.11ம் நூற்றாண்டில் கடம்ப வம்சத்து மன்னனான முதலாம் ஜெயகேசியின் கல்வெட்டில் பஞ்சனகனி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கன்னடத்தில் மேற்கு கடலின் அதிபதி என்று பொருள். இந்த பெயர் மருவி போர்த்துகீசியர்கள் காலத்தில் பஞ்சிம் என்று அழைக்கப்பட்டது தற்போது பனாஜி என்று அழைக்கப்படுகிறது ...