Posts

Showing posts from September, 2023

15) சத்தீஸ்கர்

Image
சத்தீஸ்கர் : இன்றைய சத்தீஸ்கர் "தக்ஷின் கோசாலை" என்ற பெயரால் அழைக்கப்பட்டது. கி.பி.1795ல் தான் சத்தீஸ்கர் என்ற பெயர் வந்தது. இந்த பகுதிகள் 36 கோட்டைகள் இருந்ததால் சத்தீஸ்கர் என்ற பெயர் வந்ததாக கூறுகின்றனர். ஆனால் கோட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்த பின்னரும் அதே பெயரில் தான் அழைக்கப்பட்டது. காலச்சூரிகளின் காலத்தில் இந்த பகுதி 36 கர்களாக (பகுதிகள்) பிரிக்கப்பட்டதால் இந்த பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். இந்திய சுதந்திரம் பெற்ற போது சத்தீஸ்கர் மத்திய பிரதேசம் மற்றும் பேராரின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் கி.பி.1956ல் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது இந்த பகுதிகள் மத்திய பிரதேசத்துடன் இணைந்தது. பின்னர் கி.பி.2000ல் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிந்து சத்தீஸ்கர் என்ற இந்தியாவின் 26வது புதிய மாநிலமாக உருவானது. ராய்ப்பூர்:   கல்சூரி வம்சத்து மன்னரான இராமச்சந்திரா இந்த நகரை நிர்மாணித்து ராய்ப்பூர் என்று பெயரிட்டார். சிலர் இராமச்சந்திராவின் மகனான பிரம்மதேவ் ராய் இந்த நகரை நிர்மாணித்து தனது பெயரில் ராய்ச்சூர் என்று பெயரிட்டார் என்றும் கூறுவர். கல்லாரி : ‌  இந்த கிராமத்தின் மலை உச...

14) மேற்கு வங்காளம்

Image
  வங்காளம் என்ற சொல் பகுதி பண்டைய காலத்தில் ஆண்ட பங்கா இராஜ்ஜியத்தின் பெயரிலிருந்து பெறப்பட்டது. பங்கா என்ற வார்த்தையின் பின்னர் பாங் என்று அழைக்கப்பட்டது. ஆஸ்டிரிக் மொழியில் பாங் என்பதற்கு சூரியக் கடவுள் என்று அர்த்தம். ஏன் அவ்வாறு அழைத்தார்கள்? சூரியன் முதன்முதலில் உதிக்கும் கிழக்கு திசையில் இருப்பதாலா? என்றும் தெளிவான காரணங்கள் இல்லை. கி.பி.14ம் ஆண்டு சுல்தான்கள் ஆட்சியில் பங்களா என்ற சொல் வந்தது. போர்த்துகீசியர்கள் இப்பகுதியை பெங்காலா என்று குறிப்பிட்டனர். மாநிலமாக வங்காளம் பரந்து விரிந்து இருந்தது. பெங்காலின் மொழி பெங்காலி என்பதாகும். இந்திய சுதந்திரத்திற்கு முன் வங்காளம் கி.பி.1905ல் நிர்வாக வசதிக்காக இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டதை எதிர்த்து இரண்டு பகுதிகளும் இணைந்தது. ஆனாலும் இந்திய விடுதலைக்கு பின்னர் வங்காளம் இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிழக்கு வங்காளம் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் கி.பி.1971ல் கிழக்கு வங்காளம் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை அடைந்து வங்கதேசம் என்ற தனி நாடாக உருவானது வேறு கதை. இந்துக்கள் பெரும்பான்மைய...

13) ஓடிசா

Image
பண்டைய காலத்தில் கலிங்கநாடு என்று அழைக்கப்பட்டது. அசோகர் கலிங்கத்து போருக்கு பின்னரே மனம் மாறி போரை வெறுத்தார் என்று நாம் பாடப்புத்தகங்களில் படித்த பகுதி இது தான். குலோத்துங்க சோழன் காலத்தில் ஏற்பட்ட போரை பற்றி பாடப்பட்ட கலிங்கத்துப்பரணி நூலில் குறிப்பிட்ட பகுதி தான் இன்றைய ஒடிசா. சுதந்திரத்திற்கு பின்பு ஒரிஸ்ஸா என்று அழைக்கப்பட்ட மாநிலம் தற்போது 2011 முதல் ஒடிசா என்று அறியப்படுகிறது. இங்கு பேசப்படும் மொழி ஓடியா. ஒடிசா, ஒரிசா என்ற வார்த்தைகள் பண்டைய பிராகிருத வார்த்தையான "ஒட்ட விசயா" என்ற வார்த்தையிலிருந்து வந்தது. ஒட்ட ராஷ்டிரா என்றும் ஒடிசா பகுதியை முன்பு அழைத்தனர். இங்குள்ள மக்கள் ஓட்ட நாட்டார், ஒட்டர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். பூரி கோயிலின் கல்வெட்டுகளில் இப்பகுதி ஒடிசா இராஜ்யம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புவனேஷ்வர் (புவனேஷ்வர்) : புவனேஷ்வரா என்ற சொல்லுக்கு பூமியின் இறைவன் என்ற பொருள். இந்த ஊரிலுள்ள லிங்கராஜா கோயிலில் உள்ள இறைவனின் பெயரைக் கொண்டு ஊருக்கும் பெயர் வந்தது. இந்த ஊரில் ஒரு காலத்தில் 700 கோயில்கள் இருந்ததால் கோயில்களின் நகரம் என்று அழைக்கப்பட்டது. கட...

12) குஜராத்

Image
குஜராத் என்னும் சொல் மத்திய ஆசியாவில் இருந்து கி.மு.1 நூற்றாண்டுக்கு முன்பே இந்த பகுதிகளில் வந்து குடியேறிய குர்ஜ் (குர்ஜரா) இன மக்களிடம் இருந்து வந்ததாகக் கூறுபவர். இந்த குர்ஜரா மக்கள் இன்றைய ஜார்ஜியா (பழங்காலத்தில் இதன் பெயர் குர்ஜிஸ்தான்) நாட்டிலிருந்து இங்கு குடியேறியவர்கள். பல்வேறு மாநில அரசுகளால் ஆளப்பட்டு வந்த இப்பகுதி சுதந்திர இந்தியாவில் பம்பாய் இருந்தது. பின்னர் கி.பி.1960ல் மொழி அடிப்படையில் பம்பாயில் இருந்து பிரித்து செளராஷ்டிரா மாநிலத்துடன் சேர்த்து குஜராத் என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் தலைநகர் அகமதாபாதாக இருந்தது பின்னர் கி.பி.1970ல் அகமதாபாத்திற்கு வெளியே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காந்தி நகர் என்ற நகருக்கு தலைநகர் மாறியது. அகமதாபாத் (அகமதாபாத்) :   இந்த நகர் முன்பு ஆஷாவால் என்ற பழங்குடி மக்களின் பெயரை தாங்கி ஆஷாவால் என்ற பெயராக இருந்தது. அவர்களை வீழ்த்தி முதலாம் கர்ண தேவன் நகரை நிர்மாணித்தார். அப்போது நகருக்கு வைக்கப்பட்ட பெயர் கர்ணாவதி. கர்ணாவதி மாதாவின் பெயரை தாங்கி நின்றது. பின்னர் 15 ஆம் ஆண்டு இந்த பகுதியை கைப்பற்றிய முதலாம் அகமது ஷா நகரை புணர்...