Posts

37) தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டையூ மற்றும் டாமன் பிரதேசங்கள்

Image
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டையூ மற்றும் டாமன் போர்த்துகீசிய ஆதிக்கத்தில் இருந்த டையூ மற்றும் டாமன் இந்திய சுதந்திரத்திற்கு பின்பும் கி.பி.1961 வரை போர்ச்சுகல் பொறுப்பில் இருந்தது. பின்னர் இந்திய அரசு இராணுவ நடவடிக்கையின் மூலம் கோவா, டையூ, டாமன், தாத்ரா மற்றும் நகர் ஹவேலியை இந்தியாவுடன் இணைத்தது. பின்னர் டையூ மற்றும் டாமன் கோவாவுடன் இணைந்து யூனியன் பிரதேசமாக இருந்தது. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தனி யூனியன் பிரதேசமாக இருந்தது. கோவா தனி மாநிலமாக ஆன பின்னர் டையூ மற்றும் டாமன் தனி யூனியன் பிரதேசமாகவும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தனி யூனியன் பிரதேசமாகவும் இருந்தது. பின்னர் கி.பி.2020 ஜனவரி 26 அன்று தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டையூ மற்றும் டாமன் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு பகுதிகளும் இணைந்து ஒரே யூனியன் பிரதேசமாக மாறியுள்ளது. டையூ 21 கி.மீ நீளமுள்ள கடற்கரையை கொண்டுள்ளது. தனி கடற்படை தளமும் துறைமுகத்தையும் கொண்டுள்ளது. டையூ என்பது சமஸ்கிருத வார்த்தையான "த்வீப்" என்பதிலிருந்து வந்தது. அதற்கு தீவு என்று பொருள். பகவான் கிருஷ்ணரால் கொல்லப்பட்ட அசுர வம்ச...

36) கோவா

Image
  கோவா (Goa) : பழைய இந்து புராணங்களின் படி இந்த பகுதி கோவே, கோவாபுரி மற்றும் கோமண்ட் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. அரேபிய பூகோள ஆய்வாளர்கள் இந்த நகரை சிந்தாபூர் அல்லது சண்டாபூர் என்று அழைத்தனர். 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதை கைப்பற்றிய போர்த்துகீசியர்கள் இதை வெல்கா கோவா என்று அழைத்தனர். போர்த்துகீசிய காலனி ஆதிக்கத்தில் இருந்தது இந்திய சுதந்திரம் பெற்றும் இந்தியாவுடன் இணைக்க போர்த்துகீசிய ஆட்சியாளர்கள் மறுத்தனர். பல போராட்டங்கள் இராணுவ நடவடிக்கையின் மூலம் இந்த பகுதி கி.பி.1961ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஆனாலும் போர்த்துகல் சர்வதேச நீதிமன்றத்தை நாடியும் இந்தியாவிற்கு சாதகமாகவே நீதி கிடைத்தது.  பனாஜி (Panaji) :  பனாஜி என்ற வார்த்தை பஞ்சனி மற்றும் காளி என்ற வார்த்தைகளில் இருந்து வந்தது. கி.பி.11ம் நூற்றாண்டில் கடம்ப வம்சத்து மன்னனான முதலாம் ஜெயகேசியின் கல்வெட்டில் பஞ்சனகனி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கன்னடத்தில் மேற்கு கடலின் அதிபதி என்று பொருள். இந்த பெயர் மருவி போர்த்துகீசியர்கள் காலத்தில் பஞ்சிம் என்று அழைக்கப்பட்டது தற்போது பனாஜி என்று அழைக்கப்படுகிறது ...

35) அந்தமான் & நிகோபார் தீவுகள்

Image
  அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (Andaman & Nicobar Islands)  அந்தமானின் வரலாறு இராமாயண காலத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. அப்பொழுது ஹண்டுமான் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் மருவி அந்தமான் என்று ஆனது. கி.பி.1ம் நூற்றாண்டில் தாலமி இந்த தீவை அகடேமன் அங்கதேமன் என்று குறிப்பிட்டுள்ளார். கி.பி.13ம் நூற்றாண்டில் இங்கே வந்த மார்க்கோபோலா இதை அங்கமேனியன் என்று குறிப்பிட்டுள்ளார். கி.பி.17ம் நூற்றாண்டில் இந்த தீவுகளுக்கு வந்த சர் ஆர்க்கிபோல்ட் பிளேயர் அந்தமானை ஒட்டியுள்ள தீவில் காடுகளை அழித்து பளத்தோட்டங்கள் காய்கறி தோட்டங்கள் அமைத்து மெல்ல ஒரு கடற்படை தளத்தை உருவாக்கினார். அந்தமானில் "காலாபானி" என்ற சிறைச்சாலை பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை அடைத்து வைப்பதற்காக நிறுவப்பட்ட சிறையாகும். காலா பானி என்பதற்கு கறுப்பு தண்ணீர் என்று பெயர். இந்த பெயர் இங்குள்ள சிறைவாசிகள் சூட்டிய பெயராகும். கருப்பு என்பது மரணத்தை குறிக்கும் குறியீடாகும் என்பதால் இங்குள்ள அடைக்கப்பட்டவர்கள் உயிரோடு தாய்நிலம் திரும்ப முடியாது என்ற காரணத்தால் "காலாபானி" எ...

34) லட்சத்தீவுகள்

Image
லட்சத்தீவுகள் (Lakshadeep) :  லட்சத்தீவுகள் என்பது மொத்தம் 36 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்தியாவின் யூனியன் பிரதேசங்களுள் ஒன்று. 36 தீவுக்கூட்டங்களுள் ஒரு தீவான பராலி தீவு மணல் அரிப்பின் காரணமாக நீரில் மூழ்கிவிட்டது. மொத்தம் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். மொத்தம் 32 சதுர கீ மிட்டர் பரப்பளவு கொண்டது. இந்த தீவுகள் எல்லாம் கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து 220-440 கி.மீ தொலைவில் அரபிக்கடலில் அமைந்துள்ளது. இந்த பிரதேசத்திற்கு கவரெட்டி தலைநகரமாக உள்ளது. கேரள மாநிலம் உயர்நீதி மன்றத்தின் அதிகார வரம்பிற்குள் உட்பட்டது. லட்சத்தீவுகள் என்ற சொல்லுக்கு ஒரு லட்சம் தீவுகள் என்று சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றில் பொருள்படும்.  கி.மு.6ம் நூற்றாண்டில் இந்த தீவுகளை பற்றி புத்த மத இலக்கியங்களுள் குறிப்பிடப்பட்டுள்ளது.‌ இத்தீவுகள் சேர அரச குலங்களால் ஆளப்பட்டது. பின்னர் கி.பி.7ம் நூற்றாண்டில் வந்த அரேபியர்களால் இஸ்லாம் பரவியது. இந்த பகுதி சேரர்கள் பிறகு சோழர்கள் கடைசியில் கண்ணணூர் அரச வம்சத்தால் ஆளப்பட்டது. கத்தோலிக்க போர்த்துகீசியர்கள் கி.பி.1498ல் இங்கு வந்தனர். பின்னர் கி.பி.1545ல்...

33) மணிப்பூர்

Image
மணிப்பூர்‌ (Manipur) : இந்த நகரம் சமஸ்கிருதத்தில் மாணிபுரா (நகைகளின் நகரம்) என்றும் மணலூரா என்றும் அழைக்கப்படுகிறது. மாணி என்ற சொல்லுக்கு நகை என்றும் புரே என்ற சொல்லுக்கு தங்குமிடம்/நிலம் என்றும் பொருள். இதன்படி மணிப்பூர் என்பதற்கு "நகைகள் நிறைந்த நிலம்" என்று மொழிபெயர்க்கலாம். மணிப்பூர் பழைய நூல்களில் "கங்லிபக் " என்றும் "மிடீலிபக்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஒப்பந்தத்தில் "மெக்லி " என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றாகும். வடக்கே நாகாலாந்து தெற்கில் மிசோராம் மற்றும் மேற்கில் அசாம் என்று இந்திய மாநிலங்களை எல்லைகளாக கொண்டுள்ளது. இது தவிர கிழக்கே மியான்மரையும் எல்லையாக கொண்டுள்ளது. மாநிலத்தில் பரவலாக பேசப்படும் மொழியாக மெய்டே மொழி (இது மணிப்பூரி மொழி என்று கூறப்படுகிறது) உள்ளது. இங்கு இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் சம அளவில் பெரும்பான்மையாக உள்ளனர். இங்கு மெய்டேய் மக்கள் 53% பல்வேறு நாகா மக்கள் 24% மற்றும் குகி/சோ பழங்குடியினர் 16% பேரும் மற்றவர்கள் மீதம் உள்ள 7%...

32) அருணாசல பிரதேசம்

Image
அருணாச்சல பிரதேசம் (Arunachal pradesh) அருணாச்சல பிரதேசம் என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் "விடியற்காலையில் ஒளிரும் மலைகளின் நிலம்" என்று பொருள். இந்தியாவில் காட்டுமிராண்டிதனமான மாநிலம் என்று மக்களால் தவறாக மதிப்பிடப்பட்ட மாநிலமாகவும் குறைவாக அறியப்பட்ட மாநிலமாகவும் உள்ளது. அஸ்ஸாம் சமவெளியில் இருந்து அடர்த்தியான காடுகளையும் மலை ஏறுவதற்கு சாத்தியமில்லாத செங்குத்தான மலைகளையும் அதன் திபெத்திய எல்லையாக பனி மூடிய சிகரங்களாகவும் அசாத்திய இயற்கையாக இந்த மாநிலம் அமைந்துள்ளது. இந்தியா கி.பி.1987 பிப்ரவரி 20ல் தனது மாநிலங்களுள் ஒன்றாக அறிவித்தது. மேற்கில் பூட்டான் கிழக்கில் மியான்மர் (பர்மா) மற்றும் மக்மோகன் கோட்டில் வடக்கே சீனாவால் ஆக்ரமிக்கப்பட்ட திபெத்தின் பிராந்தியத்துடன் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது. சீனாவால் இது திபெத்தின் ஒரு பகுதி என்றும் தனது நாட்டிற்குரிய பகுதி என்றும் சர்ச்சைகளுடன் உள்ள மாநிலம் என்றாலும் சர்வதேசம் அதை அங்கீகரிக்கவில்லை. கி.பி.1962 இந்தோ-சீனா போரின் போது சீனா சில பகுதிகளை ஆக்ரமித்தாலும் பின்னர் அந்த பகுதியிலிருந்து படைகளை திரும்ப பெற்றது. பண்டைய திபெத்திய உ...

31) நாகாலாந்து

Image
  ஊரும் பேரும் காரணமும் : 31 நாகாலாந்து (Nagaland) : இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று. "வடகிழக்கின் ஏழு சகோதரிகளின் மாநிலம்" என்று அழைக்கப்படுவதில் ஒன்று. இந்தியாவில் மிகச்சிறிய மாநிலங்களுள் ஒன்று. இங்கு 17 பழங்குடி இனத்தவரும் பிற துணை பழங்குடி இனத்தவர்களும் உள்ளனர். ஒவ்வொரு இனத்தவர்களும் மாறுபட்ட பழக்க வழக்கங்களை கொண்டவர்களாக உள்ளனர். கி.பி.13ம் நூற்றாண்டிலிருந்து தான் பழங்குடி மக்களின் வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. கி.பி.19ம் நூற்றாண்டிலிருந்து பிரிட்டிஷ் படைகள் தங்களது செல்வாக்கை இங்கு நிலைநிறுத்த முயன்று வந்தது. மெல்ல மெல்ல 19ம் நூற்றாண்டின் பாதியில் ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு வந்தது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் மெல்ல மெல்ல கிறிஸ்தவம் மிஷனரிகளின் மூலம் பரவி இன்று 87% க்கும் மேலாக கிறிஸ்தவர்களாக உள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் நாகாலாந்து அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கி.பி.1957 வரை அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. மீதியுள்ள பகுதிகள் நாகா மலைகள் என்று அழைக்கப்பட்டது. சுதந்திர நாகா இராச்சியத்திற்காக நாகா தேசிய கவுன்சில் ஆரம்பிக்கப்பட...