Posts

Showing posts from October, 2023

23) மத்தியபிரதேசம்

Image
  மத்தியபிரதேசம் புவியியல் ரீதியாக இந்தியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இம்மாநிலம் மத்தியப்பிரதேசம் என பெயர் பெற்றது. கிமு 6 ஆம் ஆண்டு உஜ்ஜையினி நகரம் தான் மால்வா என்றழைக்கப்படும் அவந்தி நாட்டின் தலைநகராக இருந்தது. சந்திரகுப்த மெளரியர் ஆட்சியில் அவரது மகத பேரரசின் கீழ் இருந்தது. பின்னர் குசானர்கள், சாதவாகனர்களின் கீழ் வந்தது.பின்னர் குப்த பேரரசும் வாகாடகப் பேரரசும் ஆட்சி செய்தன. பின்னர் ஹர்ஷரும் அவருக்கு பின்னால் இராஷ்டிரகூடர்களும் பரமார பேரரசும் சண்டேலர்களும் ஆண்டனர். பின்னர் 13 ஆம் ஆண்டு தில்லி சுல்தான்களின் ஆட்சியில் 16 ஆம் ஆண்டு மொகலாய பேரரசும் ஆண்டது. பின்னர் 18 ஆம் ஆண்டு மராத்திய பேரரசுக்கு பின்னர் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இந்திய பிரிவினைக்கு பிறகு கி.பி.1950ல் புந்தேல்கண்ட், சத்தீஸ்கர், போபால் சமஸ்தானம், விதர்பா பகுதிகளை கொண்டு மத்திய பாரதம், விந்திய பிரதேசம் உருவானது. பின்னர் கி.பி.1956ல் மத்திய பாரதம், விந்திய பிரதேசம் மற்றும் போபால் சமஸ்தான உள்ளடக்கிய மத்திய பிரதேச மாநிலங்களை உருவாக்கியது. இந்தியாவின் மாநிலமாக விளங்கி வந்த மத்திய பிரதேசம் கி.பி.2000ல் சத்தீ...

22) உத்திரபிரதேசம்

Image
  உத்திரபிரதேசம் உத்திரப்பிரதேசத்தில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர்கள் இந்த இடத்தில் தான் தங்களது குடியிருப்புகளை உருவாக்கினர். வேத காலத்தில் இன்றைய உத்திரபிரதேசம் குரு நாடு, பாஞ்சால நாடு மற்றும் கோசல நாடு என்று மூன்று பகுதிகளாக இருந்தது. இந்தியாவில் அதிக மக்கட்தொகை கொண்ட மாநிலம் இது. சுமார் 16.5% இந்தியாவின் மக்கட்தொகையை தன்னகத்தே கொண்ட மாநிலமாக விளங்குகிறது. உத்தர் என்பதற்கு வடக்கு என்று பொருள். வடக்கே உள்ள மாநிலம் என்பதால் உத்திரபிரதேசம் என்று அழைக்கப்படுகிறது. அவதாரங்களான இராமரும் மற்றும் கிருஷ்ணரும் பிறந்த மாநிலமாகவும் கடைசி அவதாரமான கல்கி அவதாரம் பிறக்க போகும் மாநிலமாகவும் குறிப்பிடப்பட்ட மாநிலம். இந்துக்களுக்கு பாபவிமோசனம் தரும் தலமான வாரணாசி அமைந்து இருப்பதும் இங்கே தான். புத்தரின் முதல் பிரசங்கம் நடந்தது இங்கேயுள்ள சாரநாத்தில் தான். எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்களை தன்னகத்தே கொண்டுள்ள மாநிலம். இடைக்காலத்தில் டெல்லி சுல்தான்கள் அதன் பின்னர் மொகலாயர்களால் ஆளப்பட்டு பின்னர் ஆங்கிலேயர் வசம் வந்தது. பின்னர் இந்திய சுதந்திரத்தின் போது அயோத்தி (அவுத்) மற்றும் ஆக்ரா இணைந்த ஐக்...

21) டெல்லி

Image
டெல்லி இந்தியாவின் தலைநகரமான டெல்லியின் வரலாறு மிகவும் பழமையானது. மிகவும் பிரபலமான அரசர்களால் ஆளப்பட்டு வந்துள்ளது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் வாழ்ந்த ஊரான இந்திரபிரஸ்தம் என்பதே டெல்லியின் பழைய பெயர். டெல்லி நகரின் பெயர் கி.மு.1 ஆம் ஆண்டு ஆண்ட ராஜா தில்லுவின் பெயரைக் கொண்டு டெல்லி, டெஹ்லி, டில்லி, தில்லி என்று மக்களின் வாய்வழியாக பலவிதமாக அழைக்கப்பட்டு வந்துள்ளது. டெல்லியின் இரும்பு தூண் தளர்வாக இருந்த காரணத்தால் (பலவீனமாக இருந்ததால்) கி.பி.8ம் நூற்றாண்டில் இந்நகரை கைப்பற்றிய தோமர்கள் திலி என்று அழைத்தார்கள் என்றும் கூறுவர். தோமர்கள் ஆட்சியில் அவர்களின் நாணயங்கள் டெலிவால் என்றும் அழைக்கப்பட்டது. பிரித்விராஜ் செளகான் காலத்தில் தில்பத் மற்றும் டில்லி என்பது மேன்மை என்று பொருள்படும் வகையில் இருந்த ஹிந்தி வார்த்தையில் இருந்து வந்தது என்றும் கூறுகின்றனர். சில வரலாற்று அறிஞர்கள் தில்லிகா என்பதே நகரத்தின் பெயர் என்றும் குறிப்பிடுவர். பிருத்விராஜ் கோட்டையை கட்டி அதற்கு டெஹாலி என்று பெயரிட்டார் . டெல்லி என்பது டெஹ்லீஸ் அல்லது டெஹாலியின் (நுழைவாயில் என்பது பொருள்) என்பதன் சிதைவாக இருக்கலாம் என்று...

20) ஹரியானா

Image
ஹரியானா  ஹரியானா என்ற சொல்லுக்கு கடவுளின் இருப்பிடம் என்ற பொருள். மகாபாரதத்திற்கு பின்பு விவசாய கலையில் சிறப்பு திறன்களை கொண்ட அபிராஹிகள் இங்கு வாழ்ந்ததால் ஹரியானா என்ற பெயர் ஏற்பட்டது. ஹரியானா என்ற பெயர் அபிராயனா -அஹிராயனா-ஹிராயனா என்று மருவி ஹரியானா என்றானது என்றும் கூறுகின்றனர். இந்திய மாநில பிரிவினையின் போது பஞ்சாப் இரண்டாக பிரிக்கப்பட்டு இந்து மற்றும் சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியான கிழக்கு பஞ்சாப் இந்தியா வசம் வந்தது. மேற்கு பஞ்சாபிலிருந்து ஏராளமான இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் கிழக்கு பஞ்சாபிற்கு குடியேறினர். பஞ்சாப் மாநிலத்தை பிரித்து பஞ்சாபி மொழி பேசும் மக்கள் அடங்கிய பகுதிகள் பஞ்சாப் என்றும் இந்தி மொழி பேசும் பகுதிகள் ஹரியானா என்றும் மலைபிரதேசங்கள் அடங்கிய பகுதிகள் ஹிமாச்சல் என்றும் கி.பி.1966ல் மொழி அடிப்படையில் ஹரியானா உதயமாயிற்று. ஆனாலும் பஞ்சாப் மற்றும் ஹரியானா என இரண்டு மாநிலங்களுக்கும் சண்டிகர் நகரமே தலைநகரமாக இன்று விளங்குகிறது. சண்டிகர் (Chandigarh) : இந்த புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நகருக்கு அருகில் இருந்த கோயிலான "சண்டி மந்திர்" என்பதிலிருந்து...

19) உத்தரகாண்ட்

Image
  உத்தரகாண்ட் இந்த மாநிலம் உத்ராஞ்சல் என்றும் அறியப்படுகிறது. இந்தியாவில் உத்தர் என்றால் வடக்கு என்றும் காண்ட் என்றால் நிலம் என்றும் பொருள். வடக்கு நிலம் என்ற பொருளில் வடக்கே இமயமலையை அரணாக கொண்டு விளங்கும் மாநிலம் இது. தேவ பூமி என்ற பொருளில் அழைக்கப்படும் மாநிலம் எண்ணற்ற புண்ணிய தலங்களையும் கோயில்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பழங்காலத்தில் உத்தரகுரு இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்து பின்னர் குமாவேனின் ஆட்சியாளர்கள் வசம் வந்து குர்மாஞ்சல் இராச்சியம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் கி.பி.1816ல் ஆங்கிலேயர்கள் வசம் வந்தது. இம்மாநிலத்தில் மரங்களை காக்கும் இயக்கமான சிப்கோ இயக்கத்தின் பங்கு மிகவும் அதிகம். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் கர்வால் உத்திரபிரதேசத்துடன் இணைக்கப்பட்டது. கி.பி.1998ல் உத்தரகாண்ட் புரட்சிக் குழுக்களின் கோரிக்கையால் தனி உத்தரகாண்ட் மாநிலம் கோரிக்கை எழுப்பப்பட்டு கி.பி.2000ல் தனி மாநிலமாக உத்தராஞ்சல் ஆனது. ஆனாலும் பயன்பாட்டில் உத்தர்கண்ட் என்று இருந்ததை கி.பி.2006ல் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று கி.பி.2007 ஜனவரி 1 முதல் உத்தர்கண்ட் என்ற பெயர் அமுலுக்கு ...

18) ஹிமாச்சல் பிரதேசம்

Image
  ஹிமாச்சல் பிரதேசம் இமயமலையின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும். ஹிமாச்சல் என்பதற்கு பனி நிறைந்த மலை மாகாணம் என்பது பொருள். பனி நிறைந்த இமயமலையின் மடியில் உள்ள நிலம் என்ற பொருளில் ஹிமாச்சலத்தின் புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞரான ஆச்சார்யா திவாகர் தத் சர்மாவால் ஹிமாச்சல் என்று பெயரிடப்பட்டது. இது தேவ் பூமி மற்றும் வீர் பூமி என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. ஆரம்பத்தில் குப்த பேரரசால் கைப்பற்றப்பட்டு பின்னர் ஹர்ஷரின் கீழ் வந்தது. பின்னர் பல இராஜ்ஜியங்களாக பிரிந்தது டெல்லி சுல்தான்களால் கைப்பற்றப்பட்டு மொகலாயருக்கு பின்னர் நேபாளத்தின் கோர்கா ராஜ்ஜியத்தின் கீழ் வந்தது. பின்னர் மஹாராஜா ரஞ்சித் சிங் வசம் வந்து ஆங்கிலோ-சீக்கிய போருக்கு பின் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் வந்தது. இந்திய சுதந்திரத்திற்கு பின் இமயமலையின் முன் பகுதியில் இருந்த 30 குட்டி சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டு சிம்லா ஹில்ஸ் ஸ்டேட்ஸ் மற்றும் பஞ்சாப் மலை மாநிலங்கள் சேர்த்து இந்திய யூனியனுடன் சேர்த்து கி.பி.1948 ஏப்ரல் 15ல் 'சி' மாநிலமாக உதயமானது. 31 வந்து மாநிலமாக இருந்த பிலாஸ்பூர் கி.பி.1954ல் இமாச்சலுடன் இணைக்கப்பட்டது. கி....

17) ஜம்மு, காஷ்மீர் & லடாக்

Image
ஜம்மு , காஷ்மீர் & லடாக் பூலோக சொர்க்கம் என்றால் எல்லோரின் பதிலும் காஷ்மீர் என்று தான் இருக்கும். உள்ளூர் நம்பிக்கையின் படி ஜம்மு என்ற பெயர் அதை கி.மு. 9ம் நூற்றாண்டில் ஆண்ட மன்னரான ஜம்புலோச்சன் என்பவரிடம் இருந்து வந்தது என்று கூறுகின்றனர். ஜம்மு நகரத்தின் பெயர் 3000 ஆண்டுகள் பழமையானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். லடாக் என்பதன் வார்த்தையில் La என்பதற்கு கடக்கும் மலை என்றும் dakh என்பதற்கு தேசம் என்ற பொருளில் மலைகளை கடக்கும் தேசம் என்று பொருள். காஷ்மீர் என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தையான கஷ்மிரா என்பதிலிருந்து வந்தது என்றும் அதற்கு நீர் வடிந்து உலர்ந்த இடம் என்றும் பொருள். ஆனால் இன்னொரு சாரார் இந்த பகுதியில் மக்களை குடியமர்த்திய காஷ்யப முனிவரின் பெயரிலிருந்து காஷ்மீர் என்ற பெயர் வந்தது என்று கூறுகின்றனர். வேத காலங்களிலும் 1000 ஆண்டுகளுக்கு முன்பும் காஷ்மீர் இலக்கியம் விஞ்ஞானம் செழித்து வளர்ந்தது. ஆதி சங்கரர் முதல் இராமானுஜர் வரை காஷ்மீர் சென்றும் சமய சொற்பொழிவுகள் நிகழ்த்தினர். இடையில் படையெடுப்புகளால் காஷ்மீர் அதன் சுதந்திரத்தை இழக்க தொடங்கியது. கி.பி.1846ல் முதல் ஆங்கிலோ-சீக்கிய ...